சென்ற 2024ஆம் ஆண்டு வெளியாகிய கட்டுரைகள் பதிவேற்றப்பட்டுள்ளன.


கடவுள்களுக்கு எல்லை உண்டு.

கடவுள்கள் அவரவர் காலத்திய வாழ்வியல் சத்தி, சித்தி, முத்திகளுக்கும், மற்ற சாதனைகளுக்கும் ஏற்பத்தான் தங்களுடைய அருளாட்சிக்கென்று ஒரு குறிப்பிட்ட தொலைதூர எல்லைப் பரப்பளவை பெற்றிடுகின்றார்கள், அல்லது பெற்றிருக்கிறார்கள், அல்லது பெற்றிடுவார்கள் என்பதே கடவுள்கள் பற்றிய மெய்யான விளக்கமாகும். அதனால்தான் அருளூறு பூசைமொழிகளின் மூலம் ஒவ்வொரு மனிதனும் பூசைவிதிகளின்படி, பூசை மொழிகளைக் கூறிப் பூசை செய்து தேவையான சத்தி சித்தி முத்திகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

விரிவாகப் படித்திட...

பண்பாட்டுப் புரட்சி முயற்சிகள்.

நம் நாட்டில் மாற்று மதங்களையும், வேற்று வேதங்களையும், அன்னிய மத வரலாறுகளையும், வாழ்வியல்களையும் திட்டித் தீர்த்து, முட்டி மோதி, போட்டா போட்டிகளையும், போராட்டங்களையும், பூசல்களையும், சண்டை சச்சரவுகளையும் வளர்ப்பதற்கென்றே அரசியலின் பெயரால் சில நிறுவனங்களும், இந்து மதத்தின் பெயரால் சில நிறுவனங்களும், இந்து சமுதாயத்தின் பெயரால் சில நிறுவனங்களும் தொடர்ந்து நூற்றாண்டுக் கணக்கில் வெளிப்படையாகவும், இலைமறை காயாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளால்தான் மாற்று மதங்கள், வேற்று வேதத்தவர்கள், அன்னிய நாட்டவர்கள் மிகுந்த சுறுசுறுப்போடும், எச்சரிக்கையோடும் நன்கு திட்டமிட்டு இந்து வேதத்தையும், இந்து மதத்தையும், இந்து சமுதாய வாழ்வியல் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும், வாழ்வியல் மதிப்பீடுகளையும், சடங்கியல்களையும், பண்பாடுகளையும் மிகப்பெரிய அளவில் சிதைத்துச் சீரழித்துத் தங்களுடைய மதங்களை வளர்க்கிறார்கள்.

விரிவாகப் படித்திட...

ஞானப் பெருஞ்சுடர்

மதம்தான் ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும், தன்னலமற்ற தொண்டு மனத்தையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த போக்கினையும், தாய்மொழிப் பற்றினையும், தாய்நாட்டுப் பண்பாட்டுப் பிடிப்பினையும், நாகரிக ஈடுபாட்டினையும் வளர்த்திடும் தலைவர்களை உருவாக்கிடும். இதற்காகத்தான் நான்கு யுகங்களுக்கு முன்னரே, பதினெண்சித்தர்கள் தங்களுடைய தாய்மொழியான அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியுமான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் இந்து வேதத்துக்குரிய 396 நூல்களையும், இந்து மதத்துக்குரிய 36 நூல்களையும் அருளினார்கள். அவைதான், கடந்த நான்கு யுகங்களாக இம்மண்ணுலகத்தைக் காத்து வருகின்றன. அதாவது இன்றைய 1992 என்ற கிறித்தவ ஆண்டுக் கணக்கின்படி இந்துமத ஆண்டு 43,73,093 ஆகின்றன. இவ்வளவு பெரிய நெடுங்காலமாக மனிதர்கள் அதிக அளவில் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு அழிந்து போகாமல் பாதுகாத்து வருவது பதினெண்சித்தர்களுடைய இந்து வேதமும், இந்து வேத மதமான இந்து மதமும்தான்.

விரிவாகப் படித்திட...

இந்துமத விடுதலைப் புரட்சிப் பணி

இன்றைக்கும் நாட்டு வழக்கில் குடும்ப தெய்வங்கள், குலதெய்வங்கள், கிராம தேவதைகள் என்ற மூன்று வகையினருக்கும் உரிய வழிபாடுகள் அனைத்தும் தமிழ்மொழியில் நடைபெறுகின்றன; தமிழர்களையே பூசாறிகளாக, குருக்கள்களாக, குருமார்களாகக் குருக்கலாகக் கொண்டே நடைபெறுகின்றன; குருதிப் பலிகள் கணக்கற்று கொடுக்கப்பட்டே நடைபெறுகின்றன; முட்டை, மீன், கருவாடு, ஆடு, கோழி, .. .. முதலியனவற்றின் சமைத்த இறைச்சியுணவு, படையல்களுடனேயே நடைபெறுகின்றன .. .. என்ற பேருண்மைகளால் விளங்குகின்றன. இதே நேரத்தில், ஹிந்துமதம் கைப்பற்றிக் கொண்டுள்ள கோயில்களில் சமசுக்கிருத மொழியிலேயே பூசைகள் நடைபெறுகின்றன; பிறாமணர்களே குருக்கலாக இருந்து பூசைகள் நடைபெறுகின்றன; குருதி நீராட்டோ, குருதிப் பலியோ, இறைச்சியுணவுப் படையலோ இல்லாத பூசைமுறைகள்தான் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றின் மூலம் மிகத் தெளிவாக இமயம் முதல் குமரி வரை பதினெண்சித்தர்களுடைய இந்து மதமும், பிறாமணர்களுடைய ஹிந்து மதமும் தங்கள் தங்களுடைய தனித்தன்மைகள் கெடாமல் இரண்டு தனிப்பட்ட மதங்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற பேருண்மை விளங்கிடும் அல்லது விளங்குகின்றது.

விரிவாகப் படித்திட...

நாட்டை எந்தத் தத்துவம் ஆளுகின்றது?

நம்மை யார் ஆளுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலையில்லை?! நம்மை எது ஆளுகிறது என்பதைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும்” என்ற இந்த வாசகம்தான் தமிழருடைய அரசியல் தத்துவத்தையும், சித்தாந்தத்தையும், இதை உருவாக்குபவர்களின் வரலாறுகளையும் தொகுத்துக் கூறும் பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் அரசபாரம்பரியம் (The Political History) என்ற தொடர் வரலாற்று நூலின் ஆரம்பத்தில் இருக்கிறது. அதாவது நம்மை எந்தத் தத்துவம் ஆளுகிறது அல்லது நாம் எந்தச் சித்தாந்தப்படி ஆளப்படுகிறோம் என்பதைப் புரிந்துதான் அல்லது புரிய முயன்றுதான் வாழ வேண்டும் என்ற அறிவுரையையே வழங்குகிறார்கள் பதினெண்சித்தர்கள்.

விரிவாகப் படித்திட...

அழைப்புரை

About Gurudevar
குருதேவர், சித்தர் அரசயோகிக் கருவூறார் 12வது பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும், பதினெண்சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், குருமகாசன்னிதானமாகவும் 108ற்கும் மேற்பட்ட அருட்பட்டங்களை தமது பயிற்சியினாலும் முயற்சியினாலும் பெற்றிட்ட குருதேவர் அவர்களின் எழுத்துக்களை அச்சிட எந்தப் பதிப்பகத்தாரும் சென்ற நூற்றாண்டில் முன் வரவில்லை. எனவே, குருதேவர் அவர்கள் தமது எழுத்துக்களை கையெழுத்து நகல்கள் எடுத்துப் பலரிடமும் படிக்கக் கொடுக்கும் முறையினை வளர்த்துச் செயல்படுத்திட்டார். அந்த நகல் எடுத்துப் பரப்பும் பணி இந்த நூற்றாண்டிலும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மாத வெளியீடுகளாக சில கட்டுரைகளை ஒவ்வொரு மாதமும் தொகுத்து புத்தக வடிவில் அச்சிட்டு வழங்கும் பணி நிகழ்கின்றது.

இந்தப் பணியினால் தமிழகத்திற்குள் வழங்கப்பட்ட கட்டுரைகள் இங்கே வெளியிடப் படுகின்றன. இவற்றைத் தமிழர்கள் அனைவரும் படித்திட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.