மனிதனைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் எப்பொழுதும் விழிப்பாகக் காத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கொடுமையான, இரக்கமற்ற அதிகாரியாக அல்லது தலைவனாக அல்லது முதலாளியாக இருப்பவர்தான் கடவுள் என்று கூறுவதே ஹிந்துமதம்..
.. எத்தனை யெத்தனை தமிழர்களுக்குத் தங்களுடைய சமயமான பதினெண்சித்தர்களுடைய ‘சித்தர் நெறி’யான ‘சீவநெறி’ எனப்படும் ‘மெய்யான இந்துமதம்’ வேறு; இன்றைக்கு நாட்டில் உள்ள வேதமதக் கலப்புற்ற சமசுக்கிருத மொழி ‘ஹிந்துமதம்’ வேறு என்ற தத்துவம் புரிந்திருக்கிறது?!?!?! ..
இந்துமதத்தின் மறுமலர்ச்சியே மானுடச்செழுச்சி! இந்துமதச் செழுச்சியே உலகப் பொதுவுடமை வளர்ச்சி; இந்துமத உயர்ச்சி உலகச் சமத்துவ ஆட்சி; இந்துமத உணர்ச்சி இனவிடுத¨ல மீட்சி; இந்துமதப் பயிற்சி சுரண்டுவோர் சூழ்ச்சிக்கு வீழ்ச்சி; இந்துமதமே உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டைத் தரும்!
வேலூருக்குள் பொது இடங்களில் சமுதாய அரசியல் கட்சிகளின் கொடிகள் பறக்கின்ற இடங்களில் நமது இ.ம.இ.யின் மெய்ஞ்ஞானக் கொடியை ஏற்ற முற்படுங்கள். ஒருசில தனிமனிதர்களின் வீடுகளிலாவது பரவலாக மெய்ஞ்ஞானக் கொடி ஏற்றப் பாருங்கள். வ.ஆ. மாவட்டத்திற்குள் ஒருசில ஊர்களிலாவது இ.ம.இ.யின் நீண்ட சதுர மெய்ஞ்ஞானக் கொடியையாவது; அல்லது அ.வி.தி.யின் முக்கோணச் சிவலிங்கக் கொடியையாவது ஏற்றிட முற்படுங்கள்.
குருதேவர், குருபீடம், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், அருளாட்சி நாயகம், குவலய குருபீடம், 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள்; .. .. நிகழ்த்திய முதல் சுடலைப் பரிகாரப் பூசையில் அத்து மீறி, முறை கடந்து, நெறி பிறழ்ந்து, அறிவியல் கடந்து மந்திரவாதிகள் நிகழ்த்திய அருட்போர் பற்றிய சுருக்க விளக்கக் குறிப்பு இந்தத் திருவோலையில் வழங்கப்படுகிறது.
அருளை அனுபவப் பொருளாக, அருளுலக உண்மைகளைத் தெளிவோடும், பகுத்தறிவுப் போக்கோடும், விஞ்ஞானச் சூழலோடும் வழங்கும் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் கூற்றுக்களை, எழுத்துக்களை, வாசகங்களை உணராமலும்; இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் தத்துவங்களை அறியாமலும் இருப்பது இனியாவது, இந்நூலைப் படித்த பிறகாவது மாறட்டும்.
உலக மானுட நல மேம்பாட்டுப் பணிக்கே மாபெரும் இழப்பு ஏற்படும் வண்ணம் எம்மை எம்காலத்தவர் பயன்படுத்தாமல் போய்விடக் கூடாது! இது எச்சரிக்கை வேண்டுகோள்;
உலக அருளாளர்களே! ஒன்றுதிரளுங்கள்! ஒற்றுமைப் படுங்கள்! ஒருமைப்பாட்டுடன் செயல்படுங்கள்! உலக மதத் தலைவர்களே! ஒன்றுதிரளுங்கள்! ஒற்றுமைப் படுங்கள்! ஒருமைப்பாட்டுடன் செயல்படுங்கள்!
இன்றைக்கு நாட்டு நடப்பில் மனித உடலும் யானைத்தலையும் உடைய பிள்ளையார், வினாயகர் வணங்கப்படுவதுதான் இயல்பாகவும், சிறப்பாகவும் இருக்கின்றன. ஆனால், மனிதத் தலையும், யானை உடம்பும் உடைய கணபதி பற்றி யாரும் தெரிந்து கொள்ளவே இல்லை. இதைப்பற்றி மறையாக, குருபாரம்பரியச் செவிவழிச் செய்தியாக எண்ணற்ற செய்திகள் இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில்தான் இந்துமதத்தின் தந்தை, அல்லது இந்துமதத்தின் கரு, குரு, தரு, திரு, மூலம், அனாதி, ஆதி, .. என்பன அனைத்துக்கும் உரியவர்கள் பதினெண்சித்தர்களே என்ற பேருண்மை நிலைநாட்டப்பட்டு வருகிறது. எனவேதான், கணபதி, வினாயகர், பிள்ளையார் என்ற மூன்று சொற்களுக்கு இடையேயும் உள்ள பேருண்மைகளை இதுவரை வெளிப்படையாக விளக்கிடாமலேயே இருந்து வருகிறார்கள் பதினெண்சித்தர்கள்.
12வது பதினெண் சித்தர் பீடத்தின் பீடாதிபதியாகவும், பதினெண்சித்தர் மடத்தின் மடாதிபதியாகவும், குருமகாசன்னிதானமாகவும் 108ற்கும் மேற்பட்ட அருட்பட்டங்களை தமது பயிற்சியினாலும் முயற்சியினாலும் பெற்றிட்ட குருதேவர் அவர்களின் எழுத்துக்களை அச்சிட எந்தப் பதிப்பகத்தாரும் சென்ற நூற்றாண்டில் முன் வரவில்லை. எனவே, குருதேவர் அவர்கள் தமது எழுத்துக்களை கையெழுத்து நகல்கள் எடுத்துப் பலரிடமும் படிக்கக் கொடுக்கும் முறையினை வளர்த்துச் செயல்படுத்திட்டார். அந்த நகல் எடுத்துப் பரப்பும் பணி இந்த நூற்றாண்டிலும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மாத வெளியீடுகளாக சில கட்டுரைகளை ஒவ்வொரு மாதமும் தொகுத்து புத்தக வடிவில் அச்சிட்டு வழங்கும் பணி நிகழ்கின்றது.
இந்தப் பணியினால் தமிழகத்திற்குள் வழங்கப்பட்ட கட்டுரைகள் இங்கே வெளியிடப் படுகின்றன. இவற்றைத் உலகத் தமிழர்கள் அனைவரும் படித்திட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.