அருளுலகச் செயல்வீரர்கள் அவரவர் வசதி வாய்ப்புக்களுக்கேற்ப பல இடங்களில் யாகசாலைகளை வைத்து சித்தர் கருவூறார் அருட்கோட்டங்களை உருவாக்கி வாரத்தில் சில நாட்களில் அல்லது வாரம் முழுவதும் யாகம் வளர்த்துப் பூசை செய்து பொதுமக்களுக்கு மந்திரித்து எல்லா பாதிப்புக்களுக்கும் பரிகாரம் செய்வதற்கும்; பாதிப்பு வராமல் முன்கூட்டியே தடுத்துக் கொள்வதற்குத் தேவையான 1. முடிகயிறு, 2. தாயத்து, 3. உருத்திராக்கம், 4. சக்கரம் எனும் நான்கையும் மிகமிகக் குறைந்த செலவில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளார் நமது அருட்கொடை வள்ளல், ஞானாச்சாரியார்.
மேலும் படிக்க...
கிராமம் கிராமமாக ஊர் ஊராக நமது தாழ்த்தப் பட்டவர்கள் வாழ்ந்தும் கூட நமக்கிடையில் நாடு தழுவிய ஒற்றுமையோ!; ஒருமைப்பாடோ!; ஒருங்கிணைப்போ!; ஏற்படவில்லை, ஏற்படவில்லை, ஏற்படவில்லை, ஏற்படவே இல்லை. ஏனென்றால், நம் நாட்டு அரசியல்வாதிகளும், சமயவாதிகளும், சமுதாயவாதிகளும் நம்மை வீழ்த்தப்பட்டவர்களாகவே வைத்திருக்கிறார்கள். அதாவது, நம்மைச் சிந்திக்கத் தெரியாத கைப்பொம்மைகளாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டேயாக வேண்டும், அல்லது ஏற்படுத்தப்பட்டேயாக வேண்டும். இதற்காகவேதான் யாம், இந்து முன்னேற்றக் கழகத்தை (இ.மு.க. I.M.K.) உருவாக்கியிருக்கிறோம்.
மேலும் படிக்க...
நமது கடவுள் தமிழுக்கே! தெய்வத் தமிழுக்கே! தேவத் தமிழுக்கே! வேதத் தமிழுக்கே! தமிழின மொழி மத விரோதிகளாலும், துரோகிகளாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உள்ளேயே மிகப் பெரிய சிதைவுகளும், சீரழிவுகளும் ஏற்பட்டு விட்டன, ஏற்பட்டு விட்டன, ஏற்பட்டு விட்டன என்றால் பல நூறாயிரக்கணக்கான சங்கத் தமிழ்ப் பாடல்களும், பல்லாயிரக்கணக்கான சங்கத் தமிழ் நூல்களும்; பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், 48 வகைச் சித்தர்களும் எழுதிய பல்லாயிரக்கணக்கான, பல நூறாயிரக்கணக்கான சமய, சமுதாய, கலை, இலக்கிய, தொழில், அரசியல் துறைகளைச் சார்ந்த உரைநடை நூல்களும், செய்யுள் நடை நூல்களும், இந்துவேத நூல்களும், இந்துமத நூல்களும், தமிழின மொழி மத விரோதிகளாலும், துரோகிகளாலும் பெருமளவில் வேட்டையாடப்பட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டு விட்டன.
மேலும் படிக்க...
This Madam(Mutt) alone assures each and every individual that they can clearly understand and realise their previous births, rebirths and meaning of this birth. The unique feature of this Guru Peedam, Guru Mahaa Sannidhanam, His Holiness Siddhar Raja Yogi Karuwooraar, the XII Pathinen Siddhar Peedam is the declaration
Let all human beings come; We will make them Gods themselves. So, unnecessarily you need not worry about your birth and death. The greatness and immortality of the Induism of the Pathinen Siddhars in the divine Tamil language lies in its innumerable mantras, varieties of Poojas, Thavas, Yogas, Yaagas, Omams, Ogaas, Velvis and so on.. .. .. to guide and lead people to win over the cycle of birth and death.
மேலும் படிக்க...
‘இந்து’ என்ற சொல் தமிழ்ச் சொல்லே! ‘இந்துமதம்’ தமிழரின் மதமே! ‘இந்துவேதம்’ பதினெண்சித்தர்கள் அருளியதே! அறுபத்துமூன்று நாயன்மார்களும் தமிழர்களே! பன்னிரண்டு ஆழ்வார்களும் தமிழர்களே! அறுபத்துநான்கு திருவிளையாடலும் தமிழகத்திலேயே! இந்துமத மூலக் கடவுள்கள் தமிழர்களே! இந்துமத மூல ஆச்சாரியார்கள் தமிழர்களே!
மேலும் படிக்க...
இந்துவேதம் வளர்ப்போம்! இந்துமதம் காப்போம்! இந்துவேத பாடசாலைகள் அமைப்போம்.
மேலும் படிக்க...
மார்கழி மாதத்திற்கான பாடல்கள், ஆண்டாள் பாடியவை தமிழில் உள்ளன. காசுமீர் முதல் குமரி வரை பெருமால் கோவிலில் தமிழ்ப் பாடல்தான் பாடப்படுகின்றது. திருப்பதியில் தமிழ்ப்பாடல்தான் வெங்கடாசலபதிக்கு கருவறையில் பாடப்படுகின்றது.
மேலும் படிக்க...