அருட்போரின் ஆயத்தப் பணிகளுக்காக அளப்பரிய அருளாற்றலை அண்டபேரண்ட தாத்தாக்களும், ஆத்தாக்களும், அம்மையப்பன்களும் நம்மவர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளார்கள். இவற்றை நிறைவாகவும், முழுமையாகவும் பெற்று அருட்போரில் தளபதிகளாகவும், நாயகர்களாகவும், நாயகங்களாகவும் செயல்பட்டு; உலகம் மறவாத இறவாப் புகழைப் பெற விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரும் அண்டபேரண்ட அருட்சத்திகளைப் பெறுவதற்குரிய மோன மெளன தவத்தில் ஈடுபட வேண்டும்.
மேலும் படிக்க...
தவாரத் திருவாசகங்கள் ஓதுவது எப்பொழுது நிறுத்தப்பட்டது? எப்பொழுது மீண்டும் துவக்கப்பட்டது? இப்பொழுது அப்பணியின் நிலை என்ன? அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்ற சிந்தனைகள் இளைஞர்களுக்கிடையில் நாடு முழுவதும் பரவலாக உருவாக வேண்டும். நாற்பதினாயிரம் (40,000) தேவாரப் பாடல்களில் சில நூறு மிஞ்சியிருக்கின்றன. பதினாறாயிரம் (16,000) திருவாசகங்களில் சில நூறு மிஞ்சியிருக்கின்றன. சைவப் பதிகங்களும், வைணவப் பாசுரங்களும் புதையலாக வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. சிந்திக்கவும். ஆயிரமாயிரம் கோயில்களும், அவற்றில் ஆறுகாலப் பூசைகளும், ஆண்டு முழுவதும் விழாக்களும் நிகழ்ந்தும் கூட ஆயிரக்கணக்கான கல் தொலைவு கடந்து வந்து அன்னிய வேதங்களும், மதங்களும், அவை சார்ந்த கடவுள்களும் இங்கு ஆட்சி புரிய நேரிட்டது ஏன்? எதற்கு? எவ்வாறு? எப்படி?
மேலும் படிக்க...
தங்களின் திருக்கையால் வாழ்த்துப் பெறுகிறவர்கள், தங்களுடைய அருட்கையால் பூசனைப் பொருள்கள் பெறுகிறவர்கள் ஏழு பிறப்புக்கும் புண்ணியம் செய்தவர்கள். எனவே, தாங்கள் தங்கள் வீட்டிலேயே காலை மாலை வசதி வாய்ப்புக்கேற்ப இரண்டு முறை நீராடி (குளித்துப்) பூசை செய்து வாருங்கள். அதாவது, அன்றாடப் பூசாமொழியில் உள்ள நான்கு காயந்திரிகளையும் (3 காயந்திரி + 1 கற்பூரச் சோதி மந்தரம்) 48 முறை ஓதியும், ஒருமுறை சிவபுராணம் பாடியும் பூசை செய்யவும். முடியாவிட்டால் ஒரு முறையாவது பூசை செய்து வாருங்கள். மற்றவை தாத்தாக்கள் ஆத்தாக்கள் செயல்.
மேலும் படிக்க...
‘சாதி’ என்பது ஆதியில் இல்லை. பாதியில் வந்த ஒன்றே. அதுவும் இந்த நான்காவது உகமாகிய கலியன் உகம் (கலியுகம்) பிறந்து (1359) ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இந்த இந்துவேத, இந்துமத நாடான இந்தியாவிற்குள் வந்திட்ட பிற மண்ணினரான பிறாமணர் என்னும் வடஆரியர் சூழ்ச்சியால்தான் வடிவப்பட்டு, வாழ்வு பெற்றது. எனவே, இந்தச் சாதிகள் ஒழிக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட இந்து வேத மதமான இந்துமதம் மீண்டும் மலர்ச்சி, வளர்ச்சி, ஆட்சி பெற வேண்டும்.
மேலும் படிக்க...
இருக்குவேதம் நான்கானதை ஒட்டியே இந்துவேத இலக்கியம் நான்குவகை ஆயின என்றறியின் இருக்குவேதமே இந்துவேத மூலம் என்ற பேருண்மை தெற்றென விளங்கிடும் இருக்குவேதம் இருந்தவேதம் இருக்கின்றவேதம் இருக்கப்போகின்ற வேதம் என்றுணர்ந்தே இருடிகள் ஓதியபடியுள்ள இருக்குவேதம் இருடிவேதம் என்றும் பெயர் பெறுகிறது
மேலும் படிக்க...