மதம்தான் ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும், தன்னலமற்ற தொண்டு மனத்தையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பரந்த போக்கினையும், தாய்மொழிப் பற்றினையும், தாய்நாட்டுப் பண்பாட்டுப் பிடிப்பினையும், நாகரிக ஈடுபாட்டினையும் வளர்த்திடும் தலைவர்களை உருவாக்கிடும். இதற்காகத்தான் நான்கு யுகங்களுக்கு முன்னரே, பதினெண்சித்தர்கள் தங்களுடைய தாய்மொழியான அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியுமான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் இந்து வேதத்துக்குரிய 396 நூல்களையும், இந்து மதத்துக்குரிய 36 நூல்களையும் அருளினார்கள். அவைதான், கடந்த நான்கு யுகங்களாக இம்மண்ணுலகத்தைக் காத்து வருகின்றன. அதாவது இன்றைய 1992 என்ற கிறித்தவ ஆண்டுக் கணக்கின்படி இந்துமத ஆண்டு 43,73,093 ஆகின்றன. இவ்வளவு பெரிய நெடுங்காலமாக மனிதர்கள் அதிக அளவில் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு அழிந்து போகாமல் பாதுகாத்து வருவது பதினெண்சித்தர்களுடைய இந்து வேதமும், இந்து வேத மதமான இந்து மதமும்தான்.
மேலும் படிக்க...
நம் நாட்டில் மாற்று மதங்களையும், வேற்று வேதங்களையும், அன்னிய மத வரலாறுகளையும், வாழ்வியல்களையும் திட்டித் தீர்த்து, முட்டி மோதி, போட்டா போட்டிகளையும், போராட்டங்களையும், பூசல்களையும், சண்டை சச்சரவுகளையும் வளர்ப்பதற்கென்றே அரசியலின் பெயரால் சில நிறுவனங்களும், இந்து மதத்தின் பெயரால் சில நிறுவனங்களும், இந்து சமுதாயத்தின் பெயரால் சில நிறுவனங்களும் தொடர்ந்து நூற்றாண்டுக் கணக்கில் வெளிப்படையாகவும், இலைமறை காயாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளால்தான் மாற்று மதங்கள், வேற்று வேதத்தவர்கள், அன்னிய நாட்டவர்கள் மிகுந்த சுறுசுறுப்போடும், எச்சரிக்கையோடும் நன்கு திட்டமிட்டு இந்து வேதத்தையும், இந்து மதத்தையும், இந்து சமுதாய வாழ்வியல் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும், வாழ்வியல் மதிப்பீடுகளையும், சடங்கியல்களையும், பண்பாடுகளையும் மிகப்பெரிய அளவில் சிதைத்துச் சீரழித்துத் தங்களுடைய மதங்களை வளர்க்கிறார்கள்.
மேலும் படிக்க...
நிகழவிருக்கும் கருத்துப் பரிமாற்ற சிந்தனை அரங்கம் நமது கழகத்தின் உயிர்நாடியான முன்னணிச் செயல்வீரர்களை உடல், உயிர், உள்ளம், சிந்தை, உடைமை எனும் ஐந்திற்கும் உள்ள ஆரம்ப நிலைகளையும், முடிவு நிலைகளையும், உறவு நிலைகளையும், உரிமை நிலைகளையும், சத்தி நிலைகளையும் புரிந்து கொள்வதற்காக யோகாசன, ஓகாசனப் பயிற்சிகளை வழங்குவது என்பது முதன்மையான செயல்திட்டம். அடுத்து தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரித்து ஆதகர், ஈதகர், ஊதகர், ஏதகர், ஓதகர் என்ற ஐந்து நிலைகளைப் பெறுவது? என்ற பயிற்சிகளை வழங்கல்.
மேலும் படிக்க...
கடவுள்கள் அவரவர் காலத்திய வாழ்வியல் சத்தி, சித்தி, முத்திகளுக்கும், மற்ற சாதனைகளுக்கும் ஏற்பத்தான் தங்களுடைய அருளாட்சிக்கென்று ஒரு குறிப்பிட்ட தொலைதூர எல்லைப் பரப்பளவை பெற்றிடுகின்றார்கள், அல்லது பெற்றிருக்கிறார்கள், அல்லது பெற்றிடுவார்கள் என்பதே கடவுள்கள் பற்றிய மெய்யான விளக்கமாகும். அதனால்தான் அருளூறு பூசைமொழிகளின் மூலம் ஒவ்வொரு மனிதனும் பூசைவிதிகளின்படி, பூசை மொழிகளைக் கூறிப் பூசை செய்து தேவையான சத்தி சித்தி முத்திகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க...