À¢ýÌÈ¢ôÒ:- ªó¾ ¸ðΨøǢø ÌÈ¢ì¸ôÀÎõ «È¢Å¢ì¨¸ ±ñ: 7777³ 2018¬õ ¬ñÎ Á¡º¢ Á¡¾ ¦ÅǢ£ðÊø ÀÊì¸Ä¡õ.
நமது தமிழகம்தான் இந்துவேதமும், இந்துமதமும் பிறந்த இடம். நமது தமிழகத்தில்தான் இந்துவேதமும், இந்துமதமும் கூறுகின்ற 192 வகைப்பட்ட கடவுளர்கள் வாழும் இடங்களும் (கருவறைகள், வெட்டவெளிக் கருவறைகள், வழிபாட்டு நிலையக் கருவறைகள், கோயில் மூலக் கருவறைகள்) இருக்கின்றன. தமிழகத்துக்குள்தான் சிவபெருமான்கள் 64 முறை (ஒரே சிவபெருமான் 64 முறை வந்ததாகவும் கூறுவார்கள்; 64 சிவபெருமான்கள் வந்ததாகவும் கூறுவார்கள்.) நேரில் வந்ததாக வரலாறு இருக்கிறது. தமிழகத்தில்தான் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள், தாயுமானவர், பட்டினத்தார், அருணகிரியார், சங்கராச்சாரியார், இராமானுஞ்சாச்சாரியார், இராகவேந்திரர், .. .. முதலிய பலரும் தோன்றியிருக்கிறார்கள்???….!!! ஆனால், ஆனால், ஆனால், I. தமிழகத்தில்தான் பாழடைந்த கோயில்கள் அதிகம் இருக்கின்றன. II. தமிழகத்தில்தான் நாத்திகர்கள், கடவுள் வெறுப்பாளர்கள், எதிர்ப்பாளர்கள், மறுப்பாளர்கள் நிறைய இருக்கிறார்கள். III. தமிழகத்தில்தான் பல்வேறு மொழிகளுக்குரிய அன்னிய மந்திரவாதிகள், குறிகாரர்கள், சோதிடர்கள், … மிகுதியாக இருக்கிறார்கள். IV. தமிழகத்தில்தான் அன்னிய மதங்கள் வளத்தோடும், பொலிவோடும் வாழுகின்றன.
மேலும் படிக்க...
இந்துமதத்தில் அதிக ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய குலதெய்வம், விருப்ப தெய்வம் முதலியவைகளின் பெயரால் மடாதிபதிக் குழுவை அமைக்க வேண்டும். அதாவது, குறிப்பிட்ட ஊரின் பெயர், மற்றும் கோயிலின் பெயர் எழுதி அக்கோயிலின் தெய்வத்தின் பெயரை எழுதி மடாதிபதி, பீடாதிபதி, .. .. வாமகோடிப் பீடம் என்று அறிக்கையில் (எண்: 7777) உள்ளபடி 18 அருட்பட்டங்களை உடைய பதினெட்டுப் பேர்களை உண்டாக்கி விட வேண்டும். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பூசை செய்தால் மிக விரைவில் அவரவர்க்கு உரிய வண்ணம் சத்தி, சித்தி, முத்திகள் கிடைக்கும். இதன்படி நாடு முழுவதும் குக்கிராமம், சிற்றூர், பேரூர், சிறிய நகரம், மாநகரம் என்று ஒவ்வோர் இடத்திலும் உள்ள ஒவ்வொரு கோயிலிலும் ஒரே ஒரு மடாதிபதிக் குழுவாவது அமையும்படிச் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
இதுமுதல் தாங்கள் இத்துடன் அனுப்பப்பட்டுள்ள அறிவிக்கை எண் 7777இன் படி சிவகாசி ஈசுவரன் கோயில் மடாதிபதி என்ற அருட்பட்டத்தையும், பொறுப்பையும் பெறுகிறீர்கள். எனவே, உங்களின் கீழ் பீடாதிபதி, சன்னிதானம், .. .. வாமகோடிப் பீடம் எனும் 17 அருட்பட்டத்தவர்களையும் உருவாக்கிடுங்கள். இதுபோல், உங்கள் வட்டாரத்தில் உள்ள எல்லாக் கோயில்களுக்கும் சிறியவை, பெரியவை என்ற வேறுபாடு அல்லாமல் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மடாதிபதிக் குழுவையாவது உருவாக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு கோயிலுக்கும் வருகின்ற பத்தியாளர்கள் கூட்டத்தைச் சந்தித்து அதில் 18 பேர்களையாவது தேர்ந்தெடுத்து அறிவிக்கை எண் 7777-இல் உள்ளபடி 18 அருட்பட்டத்தவர்களையும் உண்டாக்கிடல் வேண்டும்.
மேலும் படிக்க...
நமது நிறுவனம் தமிழர்களைத் தமிழர்கள் என்று உணரும்படிச் செய்யப் பாடுபடும் பண்பாட்டுப் புரட்சி நிறுவனம். எதிரிகளை வெல்லுவது நமது நோக்கமல்ல; தமிழர்களை ஒற்றுமைப்படுத்துவதுதான் நமது நோக்கம். மாற்று மதங்களோடு போரிடுவது நமது நோக்கமல்ல; இந்துக்களை, இந்துமதத்தைப் புரிந்து கொள்ளும்படிச் செய்வதுதான் நமது நோக்கம்.
மேலும் படிக்க...