எந்த ஊரானாலும் சரி, எந்தக் கோயிலானாலும் சரி; அங்குள்ள மந்திரவாதிகளாலோ, தேவ கணங்களாலோ நம்மவர்களை எதிர்க்க முடியாது. ஏனெனில், அண்டபேரண்டங்களிலிருந்து வந்துள்ள அருட்போருக்குரிய ஆத்தாள் தேவி உக அற நாயகியும், ஆத்தாள் தேவதேவியும், அருட்கோலம் பூண்டுள்ள ஆத்தாள் தேவி குருமாரியம்மனும், கருகுலத்தில் பதினெட்டுப் (18) பீடங்களிலும் எழுந்தருளியுள்ள பதினெட்டு (18) காளிகளும், தாத்தாக்கள் ஆத்தாக்களும் தலைமையேற்றுச் செயல்படத் துவங்கி விட்டார்கள். எனவே துணிந்து செயல்படுங்கள். ஆனால், உலகியலாக எந்த ஊர் மக்களிடையேயும் கருத்து மாறுபாடு கொள்ள வேண்டாம். நமது அறிக்கைகள், புத்தகங்கள் அனைத்தையும் வழங்கிடுங்கள். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும், தெருவிலும், ஊரிலும் 18 பேர் கொண்ட மடாதிபதி குழு அமைக்க ஏற்பாடு செய்யுங்கள். அதாவது அறிவிக்கை எண் 7777தான் அருட்போரின் ஆயுதம், சாதனம், கருவி.
மேலும் படிக்க...
அருட்போர் வியூக நாயகமாகிய தாங்கள் உடனடியாக நான்கு மண்டலங்களையும் இந்த சிவனாகப்பட்ட வடிவமைப்புக்களை உடைய யாகசாலைகளை உடைய அருட்கோட்டங்கள் உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இந்த அருட்போர் வியூகத்தின் விரிவாக்கமாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் படிப்படியாக தங்களது முயற்சியால் இந்த 5 வகை யாகசாலை உடைய சித்தர் கருவூறார் அருட்கோட்டங்கள் உருவாக்கப் பட வேண்டும், உருவாக்கப் பட்டேயாக வேண்டும். வட இமயத்தின் முடி முதல், தென்கோடிக் கன்னியாகுமரிப் பகலவதித் தாயின் திருவடி தொழும் கடற்கரை வரை இந்துமதம் வாழுகிறது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். அதாவது, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அருட்போர் வியூகம் அமைக்கப்பட்டாக வேண்டும். புரிந்தும், புரியவைத்தும் செயல்படுங்கள்.
மேலும் படிக்க...
ஏற்றதொரு போற்றற்குரிய ஆற்றல்மிகு
அருட்பணி விரிவாக்கத் திட்டம் என்ற ஒரு செயல்திட்டத்தை குவலய குருபீடம், அனாதியாதி கடந்த தம்பிரான் சுவாமிகள், அனாதிசங்கராச்சாரியார் ஆதீனம், அந்தணர் அண்ணல், ஞானாச்சாரியார் அவர்கள் இப்போது அறிவித்துள்ளார்கள், அறிவித்துள்ளார்கள், அறிவித்துள்ளார்கள். இதனைத் தங்களைப் போன்றோர் நன்கு தெரிந்து, அறிந்து, ஆராய்ந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து, நம்பி ஏற்றுச் செயலாக்கிட முன்வர வேண்டும். அப்பொழுதுதான் தாங்கள் குறைப்பட்டுக் கொண்டது போல் நாட்டு மக்களிடையில் உள்ள மதம் பற்றிய ஆர்வமின்மை, அக்கரையின்மை, பற்றின்மை, ஆழ்ந்த ஈடுபாடின்மை, .. .. முதலியவையெல்லாம் வேருடன் அகற்றப்பட்டிடும். உரிய மாற்றங்கள் விளைவிக்கப்பட்டிடும்.
மேலும் படிக்க...
நம்மவர்களின் குழந்தைகள் அடிக்கடி எம்மைச் சந்தித்து அருட்பயிரின நாற்றுப் பண்ணைகளாகவும், விதைப் பண்ணைகளாகவும் நாற்றங்காலாகவும் தயாரானால்தான் வருங்காலத்தில் அருளுலகம் செழுமையும், கொழுமையும் உடையதாக இருந்திடும். இல்லாவிட்டால், நாம் எத்தகைய பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்றிட்டாலும், நாம் எத்தகைய பெரிய பெரிய சாதனைகளைச் சாதித்தாலும் வருங்காலத்தில் அருளுலகம் வறுமையும், வெறுமையும் பெற்றிடும், பெற்றிடும், பெற்றிடும். எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை. ஏனென்றால், எம்மால் பெரியவர்கள் மட்டும் அருளாளர்களாகத் தயாரிக்கப்பட்டுப் பயனில்லை. இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் அருளாளர்களாக அருளுலக வாரிசுகளாக தயாரிக்கப் பட்டேயாக வேண்டும். அப்பொழுதுதான், இந்த நான்காவது யுக இறுதிவரை, அதாவது மீதமுள்ள 4,27,000 ஆண்டுகளிலும் அருளாளர்கள் வாழையடி வாழையெனத் தொடர்ந்து பரம்பரையாகத் தோன்றிட முடியும், தோன்றிட முடியும், தோன்றிட முடியும். இதற்குரிய அருளாணை முதல் யுகத்திலேயே ஆதிசிவனாரின் குருபாரம்பரியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பொய்யான ஹிந்துமதத்தால்தான் மெய்யான இந்துமதத்தின் உயிர்நாடியான மந்திரிக்கும் கலைகள், பரிகாரம் செய்யும் கலைகள், இந்துவேத நூல்கள், இந்துமத நூல்கள் .. .. முதலியவற்றைச் செயலாக்கப் புறப்பட்டிருக்கும் நமக்கு நம்முடைய கோயில்களுக்குள்ளேயே வரவேற்பில்லை.
மேலும் படிக்க...