“ªÁÂõ Ó¾ø ÌÁâ Ũà ¯ûÇ Àø§ÅÚ Á¡¿¢Äí¸Ç¢ø ±ó¾ Á¡¿¢Äò¾¢Ö§Á ¬ðº¢¦Á¡Æ¢Â¡¸§Å¡ «øÄÐ §ÀîÍ ¦Á¡Æ¢Â¡¸§Å¡ ªøÄ¡¾ ´Õ ¦Á¡Æ¢Â¡É ºÁÍ츢վ ¦Á¡Æ¢ ±ôÀÊ? ²ý? ±¾ü¸¡¸? ±ùÅ¡Ú? ±ô¦À¡Ø¾¢ÕóÐ? ªóÐ Á¾ò¾¢ý ¬ðº¢¦Á¡Æ¢Â¡¸ ¬ì¸ôÀð¼Ð? ªóÐ Á¾ò¾¢ý ⨺¦Á¡Æ¢Â¡¸ ¬ì¸ôÀð¼Ð? ªóÐ Á¾ò¾¢ý º¼í¸¢Âø ¦Á¡Æ¢Â¡¸ ¬ì¸ôÀð¼Ð? ªóÐ Á¾ò¾¢ý §Å¾ ¦Á¡Æ¢Â¡¸ ¬ì¸ôÀð¼Ð? .. .. .. ±ýÈ Å¢ÿ츩Çì ¸¼ó¾ ªÃñ¼¡Â¢Ãõ (2000) ¬ñθǡ¸ ¬÷ôÀâòÐì ¦¸¡ó¾Ç¢ìÌõ ¸¼Ä©Ä §À¡ø ¦¾¡¼÷óÐ ±ØôÀ¢ ÅóÐõ ܼ ±ÅÕ¨¼Â ¸¡¾¢Öõ ªì§¸ûÅ¢¸û Å¢ÆÅ¢ø©Ä, Å¢ÆÅ¢ø©Ä, Å¢ÆÅ¢ø©Ä. «¾¡ÅÐ, ª¨Å ÀüÈ¢ ±ÅÕ§Á º¢ó¾¢ì¸ò ¾Â¡Ã¡¸Å¢ø©Ä! ±ÅÕ§Á º¢ó¾¢ì¸ò ¾Â¡Ã¡¸Å¢ø©Ä! ±ÅÕ§Á º¢ó¾¢ì¸ò ¾Â¡Ã¡¸Å¢ø©Ä!”
இ.ம.இ.யைச் சேர்ந்தவர்கள்தான் அருட்கோட்டங்களை வைத்து யாகம் செய்தும், பரிகாரப் பூசைகள் செய்தும்; கோயில்களில் வாரவழிபாட்டு மன்றங்கள், திருவிளக்குப் பூசைகள், சந்தனக் காப்பு விழாக்கள், அருட்கணிப்புச் செய்தல், அருள்வாக்கு கூறுதல், சோதிடம், குறி, சாதகம், கைரேகை, பரிகாரம், .. .. முதலியவைகளைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமும் இந்துமத உணர்வையும், நம்பிக்கையையும், பற்றையும் மறுமலர்ச்சியடையச் செய்திடுவார்கள். இதற்காக பாதிப்பாளர்கள், நோயாளிகள், பேயாளிகள், பரிகாரத்திற்கு வருபவர்கள் முதலியவர்களின் இல்லங்களில் திரைச் சீலைகளாகவும், பூசையறை ஓவியமாகவும், வீட்டு வாசலில் கம்பம் நட்டுப் பறக்க விடும் ஓவியமாகவும், வீட்டு வாசலில் மெய்ஞ்ஞானக் கொடியாகவும் சிவலிங்கக் கொடிகள் பறக்க விடப்பட்டாக வேண்டும்.
மேலும் படிக்க...
தீட்சை பெற்றுக் கொள்ளத் தயாரா? ஓகாசன யோகாசனப் பயிற்சிகள் செய்ய முடியுமா? அன்றாடம் சிறிது நேரமாவது பூசை செய்ய முடியுமா? உன்னால் அனைவருடனும் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய்ப் பழகிட முடியுமா? உனக்குள் தன்னல வெறியோ, அகம்பாவமோ, ஆணவமோ, தானென்ற வம்பு, வீம்போ இல்லாமல் அருட்போர்ப் பணியும், அருளாட்சிப் பணியும் ஆற்றிட முடியுமா? பேருண்மைகளை மறையாகக் காத்தல் (இரகசியங்களைக் காத்தல் = maintenance of secrecy) எனும் பண்பை வளர்த்துக் கொண்டு காரைக்குடியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் சுமார் 10, 15 கி.மீ சுற்றளவிற்குள் உள்ள எல்லா கோயில்களுக்கும் நம்மவரில் ஒருவர் இருவரையாவது துணைக்கு வைத்துக் கொண்டு ஒருசில புதியவர்களை அவ்வப்போது உருவாக்கிக் கொண்டு எல்லாவகைப்பட்ட கோயில்களுக்கும் புத்துயிர் ஊட்ட முடியுமா? அருளுலக விழிச்சி, எழிச்சி, செழிச்சி உண்டாக்க முடியுமா?
மேலும் படிக்க...
எங்கும் என்றென்றும் இருக்கும்படியாக அதாவது, நிலையாக நிலைத்துப் பரவிப் பயன்படும்படியாக அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் அருளியுள்ள ‘இருக்கு வேதம்’ எல்லா மக்களுக்கும் தெரிவிக்கப்படல் வேண்டும். ஓரளவு எழுத்தறிவும், பத்தியுணர்வும் உள்ளவர்கள் இருக்கு வேதம் மந்தர, மந்திர, மந்திற, மாந்தர, மாந்தரீக ஒலிகளை அன்றாடம் அகத்திலும், இல்லத்திலும், ஆலயத்திலும், அலுவலிடங்களிலும் ஓதி எங்கும் அருட்பயன் விளையும்படி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
அருளாட்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும் தங்களுக்கு அருளுலகத்தவரும், பொருளுலகத்தவரும் உரிய பாதுகாப்பு வழங்குவார்கள், கவலை வேண்டாம். தாங்கள் முழுமையான அளவு தனிப்பட்ட அடியார் என்ற முறையில் முழுமையாகத் தயாராகி எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், பறக்கின்ற பட்டத்தை இழுத்துப் பிடித்து அதன் கயிற்றை தரையிலுள்ள முள் செடியில் கட்டிவிட்டால் அந்தப் பட்டம் மேலே பறந்து போக முடியாமல் காற்றில் படபடவென்று அடித்தபடியே இருக்கும். ஒன்று, பட்டம் நூலை அறுத்துக் கொண்டு வேறு எங்காவது பறக்க வேண்டும். அல்லது பட்டம் பழுதடைய வேண்டும். பிறகு கீழே வர நேரிடும். இதுதான் சோதனை. இதனை யாரோ சிலர் வெல்லுவார்கள். அல்லது நல்லவர்கள் கையில் பட்டம் பறந்து கொண்டிருந்தால் பட்டம் அவ்வப்போது இறக்கி கீழே பாதுகாப்பாக வைத்திருந்து அடிக்கடி பறக்க விடப்பட்டு அழகு பார்க்கப்படும்.
மேலும் படிக்க...
எந்தை (என் தந்தை) யாம், மூன்று மாதக் குழந்தையாக பால்குடிக்கும் சிசுவாக இருந்தபோதே எம்மை எதிரிகள் அழித்து விடக் கூடாது என்பதற்காக தாய்ப்பாலோடு நவநஞ்சையும் கலந்து ஊட்டினார். அதுமட்டுமல்ல, நவநஞ்சை உண்டு யாம் தப்பிப் பிழைத்ததால்தான்; யாம்தான் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருத்தோற்றம் பெற்றுள்ளோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
மேலும் படிக்க...