• முகப்பு>
  • 2010>
  • 2010-06
  • 2010-06

    »¡ÿâ¡÷ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþâý À¨¼ôÒì¸û

    ¬É¢ 43,73,111

    “«ÕÙĸ «È¢Ó¸ «È¢×¨Ã «ïºø”

    1980ªø ÌÕ§¾Å÷ ¾ÁÐ Ò¾¢Â º£¼÷ ´ÕÅÕìÌ ±Ø¾¢Â Å¢Ã¢Å¡É Å¢Çì¸í¸û ÀÄ ¾Õõ «ïºø ÅÊÅì ¸ðΨà ªó¾ Á¡¾ ¦ÅǢ£ðÊø ÅÆí¸ô Àθ¢ýÈÐ. ¾©ÄôÀ¢ü§¸üÀ ªó¾ì ¸ðΨà «©ÉòРŨ¸ôÀð¼ «ÕÙĸ ¬÷ÅÄ÷¸ÙìÌõ, «È¢Ó¸ò¾¡÷¸ÙìÌõ, ÒâӸò¾¡÷¸ÙìÌõ .. º¢ò¾÷ ¦¿È¢Â¡ÇḠ¬¸¢ÎžüÌ ÅÆí¸¢Îõ «È¢×¨Ã¸û ÀÄ ¦¸¡ñ¼Ð. ¬úóÐ ÀÊòÐô ÀÂý ¦ÀüȢθ.


    குருதேவரின் பணிநிலை
    பக்குவமடையாதவர்கள், உறுதியில்லாதவர்கள், உரம் இல்லாதவர்கள், வீரமில்லா ஈகம் (தியாகம்) இல்லாதவர்கள், அவசரக்காரர்கள், ஆத்திரக்காரர்கள்.. முதலியோர் ஆண்டுக் கணக்கில் குருவிடம் பழகினாலும் பயனில்லை; அவர்களுக்கு உண்மையான பத்திநிலை, சத்திநிலை, சித்திநிலை கிடைக்கவே கிடைக்காது. இதைப் புரியாதவர்கள் ஒருதலைச் சார்பாக (partiality) செயல்படுவதாகத் தவறாக எண்ணிடுவார்கள். அல்லது அவர்களாகவே பயனற்ற, உண்மையற்ற கற்பனாவாதக் குறைகளைக் குருவிடம் கண்டு குற்றஞ் சாட்டிப் பிரிந்து சென்று விடுவார்கள்.. ..

    மேலும் படிக்க...


    சித்தர் நெறி
    நாம் ‘இந்து மறுமலர்ச்சி இயக்கம்’ அமைத்து நமது முயற்சியை இந்தியத் துணைக் கண்டம் தழுவிய ஒரு பெரு முயற்சியாக வளர்த்திருக்கிறோம். இந்த வளர்ச்சியின் முயற்சிதான் எல்லா இனத்தவரையும், மொழியினரையும், மாநிலத்தவரையும்.. இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளும் புதிய புரட்சித் திட்டம் உருவாகக் காரணம்.

    மேலும் படிக்க...


    தாய்மொழி
    இந்தி மொழியை அரசியல் மொழியாக்கி; அதைப் பிற மொழியினரின் மீது திணிப்பது இந்தியாவைத் துண்டு துண்டாகச் சிதறடிக்கும். இந்தி மொழியினருக்கும் பிற மொழியினருக்கும் ஒரு மாபெரும் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு ஏராளமான உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்படும். ஒரு வேளை, இந்த உள்நாட்டுப் போரில் இந்தியா என்ற ஒரு நாடே இல்லாமல் போனாலும் போகலாம்.

    மேலும் படிக்க...


    இந்துமதம்
    ‘சித்தர் நெறி’ பிறந்த மண்ணான குமரிக் கண்டத்தில் ஒரு பகுதியான இந்தியாவிலேயே வேரூன்றி இருக்கிறது. இது புத்தம், சமணம்,.. போன்ற பல பெயர்களைப் பெற்றதுண்டு. இப்போது, நாட்டின் பெயரால் ‘இந்து மதம்’ (இந்தியாவின் மதமே இந்து மதம் India –> Induism) என்று உலக அரங்கில் அறிமுகமாகி வாழுகின்றது. சித்தர் நெறியின் வழிபாட்டுக்குரிய சின்னம் ‘இலிங்கம்’. இந்த இலிங்கச் சின்னம் ஒரு காலத்தில் இம்மண்ணுலகம் முழுதும் வணங்கப் பட்டது.

    மேலும் படிக்க...


    இந்துமதமே இந்தியாவின் மதம்
    இந்திமொழியை அரசாங்க மொழியாக (Government Language), ஆட்சிமொழியாக (Administrative Language), .. ஆக்கியதால்தான் எல்லா மொழியினருக்கும் இந்தி மொழியிடத்து வெறுப்பும், மறுப்பும், எதிர்ப்பும் கொழுந்து விட்டெரியும் காட்டுத் தீயாக, குமுறி வெடிக்கும் எரிமலையின் நெருப்பாக ஆகியுள்ளன. இந்த இந்திமொழி வெறியினரால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடும், ஒற்றுமையும் சிதைந்தும் சீரழிந்தும் வருகின்றன. என்றாவது ஒருநாள், இந்தியநாடு துண்டு துண்டாகச் சிதறிப் பிரியும் நிலை ஏற்படுமேயானால்; அதற்கு இந்திமொழிதான் காரணமாக இருக்கும்.

    மேலும் படிக்க...


    சங்கராச்சாரியார் சாதனை
    இந்துமதம் சங்கராச்சாரியாரின் சாதனையல்ல; சங்கரருக்குப் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்துமதம் தோன்றிவிட்டது; இந்துமதத்தில் நலிவும், தளர்ச்சியும் ஏற்படும் போதெல்லாம் அருளாளர்கள் தோன்றி இந்து மதத்தை வலிமைப் படுத்தி, வளர்ச்சி பெறச் செய்திருக்கிறார்கள். அப்படி இந்து மதத்தைக் காலங்கள் தோறும் காத்திட்ட அருளாளர்களின் பட்டியலில் இடம் பெறுகின்றவரே சங்கராச்சாரியார். இவர், ஏற்கனவே இருந்த வேதங்களுக்கும், உபநிடதங்களுக்கும் பொருள் விரித்துரைத்துத் தனது அறிவாலும் அருளாலும் இந்தியா முழுதும் தனித்தனியாக வளர்ந்திருந்த வழிபாடுகளை யெல்லாம் ஒருங்கிணைத்து இந்துமதம் என்ற நிறுவன ஒழுங்கமைப்பை உண்டாக்கினார்.

    மேலும் படிக்க...


    சித்தர் கருவூறார் முயற்சி
    பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் (கி.பி. 785-1040) அவர்கள் மாபெரும் முயற்சிகளைச் செய்தார். அதன் பயனாகப் பிற்காலச் சோழப் பேரரசு (கி.பி.785-1279 - The Later Chola Empire) உருவாயிற்று. இது சித்தர்களின் சித்தர்நெறி எனும் ‘சைவ சமயம்’, ‘சைவ சித்தாந்தம்’, ‘சிவமதம்’ எனும் இந்துமதம் தமிழ்மொழியின் அடிப்படையில் மறுமலர்ச்சி பெற்றிடச் செய்தது.

    மேலும் படிக்க...