• முகப்பு>
  • 2015>
  • 2015-01
  • 2015-01

    º¡¾¢ §ÅüÚ¨Á¸Ç¡ø ¾Á¢Æ÷¸û À¢ÈÁñ½¢Éâ¼õ «Ê¨ÁÂ¡É ªÆ¢¿¢©Ä

    ¨¾ Á¡¾ ¦ÅǢ£Π(Jan2015 - Feb2015) ¦ÁöÂ¡É ªóÐÁ¾ ¬ñÎ 43,73,116

    ¯ûÙ¨È

    1. º¢ò¾÷ ¦¿È¢Ôõ, º¡¾¢ ªÉ ¦Á¡Æ¢ ¦ÅÈ¢¸Ùõ.

    2. ¦ÁöÂ¡É ªóÐÁ¾ò¾¢ø º¡¾¢ §ÅüÚ¨Á¸§Ç ¸¢¨¼Â¡Ð. À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢Â¢ý «Õǡ𺢠¬©½¸Ç¢ø 10ÅÐ ¬©½.

    3. º¡¾¢¸©Ç ´Æ¢ò§¾Â¡¸ §ÅñÊ ¸ð¼¡Âî Ýú¿¢©Ä. À¾¢¦Éñº¢ò¾÷ À£¼¡¾¢À¾¢Â¢ý «Õǡ𺢠¬©½¸Ç¢ø 18ÅÐ ¬©½.

    4. «Õ½¸¢Ã¢Â¡÷ ÅÃÄ¡üÈ¢ø ¦À¡öÂ¡É †¢óÐÁ¾ò¾¢ý ¬À¡ºì ¸üÀ©É.


    சித்தர் நெறியும் சாதி இன மொழி வெறிகளும்
    இன்றுள்ள இந்துக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்களுக்கு மெய்யான இந்துமதம் என்ற ஒன்று இருப்பது தெரியாது! தெரியாது! தெரியாது! எனவே, இன்றைக்கு நாட்டு நடப்பில் உள்ள சாதி, இன, மொழி வெறிகள் மெய்யான இந்துமதமான சித்தர் நெறிக்குரியவை அல்ல! அல்ல! அல்ல! அல்லவே அல்ல! இந்தக் கருத்தை நம்மவர்கள் நன்கு புரிந்து கொண்டால்தான் பிறாமணர்களாலும், சமசுக்கிருதத்தாலும் மெய்யான இந்துமதம் கெடுக்கப்பட்டே போலியான ஹிந்துமதம் உருவாக்கப்பட்டது அல்லது போற்றிப் பேணி வளர்க்கப் பட்டது என்ற பேருண்மை தெளிவாகிடும்.

    மேலும் படிக்க...


    பீடாதிபதிகளின் எழுத்துக்களில் சாதி பற்றிய குறிப்பு
    தமிழகத்திலுள்ள அனைத்துச் சாதியினரும் சாதிவெறிகளை முழுமையாக விட்டுவிட்டுத் திருமண உறவுகளையும், பிற உறவு முறைகளையும், உரிமைகளையும் புதுமையாகப் பத்தியின் பேரால் உருவாக்கிக் கொண்டேயாக வேண்டும். அதாவது, தமிழன் என்ற ஒரே சொல்லின் கீழ் தமிழகத்து மக்கள் அனைவரும் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் ஒருவரோடு ஒருவர் சமத்துவமாகக் கலந்து பழகிப் பற்றோடும், பாசத்தோடும் ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும் படிக்க...


    தமிழகத்தில் சாதிகளை ஒழித்தேயாக வேண்டும்
    ஒரே சாதிக்குள் திருமண உறவுகள் ஏற்படுத்தக் கூடாது என்ற தடையையும் விதித்து; அனைத்துச் சாதியினரும் ஒன்றாகிடக் கலப்புத் திருமணங்களை முழுமையாகத் தோற்றுவிக்க வேண்டும். சாதியினால் விளையக் கூடிய அனைத்து விதமான சண்டை சச்சரவுகளையும் கலவரங்களையும் உடனே அடக்கித் தீர்வு கண்டு நீதி வழங்கி முழுமையாக முடிவு செய்ய வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அரசாங்கத்திலோ, பூசைகளிலோ, கல்விச்சாலைகளிலோ, மருத்துவக் கூடங்களிலோ, சேவலோன் கலைப் பயிற்சிச் சாலைகளிலோ, அங்காடிகளிலோ, சத்திர சாவடிகளிலோ, .. சாதி வேறுபாடு காட்டக் கூடாது; எவருடைய சாதியையும் விசாரிக்கக் கூடாது .. என்று அரசாணை விதிக்க வேண்டும்.

    மேலும் படிக்க...


    அருணகிரியார் வரலாறு
    அருணகிரியார் பெண்ணின்பத்தை அதிகமாகத் துய்த்து தொழுநோய் வந்து தற்கொலை செய்து கொள்ள முயன்று முருகப் பெருமானால் தடுத்து ஆட்கொள்ளப் பட்ட ஞானியார்” - என்று (பிறமண்ணினர்) பிறாமணரால் ஒரு வரலாறு கூறப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறான, சூழ்ச்சியான, மோசடியான வரலாறாகும். அதாவது, பல்லாயிரக் கணக்கான தமிழ் அருட்பாக்களைப் பாடிய மாபெரும் கவிஞரான அருணகிரியாரை அவமானப் படுத்துகின்ற முறையில் அல்லது இழிவுபடுத்துகின்ற முறையில் பிறாமணர்கள் மேற்படி வரலாறைக் கற்பனையாக பரப்பியிருக்கிறார்கள்.

    மேலும் படிக்க...


    உலக முதல் மதம்
    இந்துமதத்தைப் பற்றிய சில சுருக்க விளக்க வாசகங்கள்

    மேலும் படிக்க...