[ªó¾ ¬Å½¢ Á¡¾ò¾¢ø ¸ñ½§¾Åý À¢Èó¾ ¿¡û ‘§¸¡ÌÄ¡‰¼Á¢’ ±ýÚ À¢ÈÁñ½¢Éáø ¦ÀÂâ¼ô ÀðÎô ÀÄáÖõ ÅÆ¢À¼ô ÀΞ¡ø; ¦ÁöÂ¡É ªóÐÁ¾ò¨¾ Å¢Ç츢 «ÕǢ ÌÕ§¾Å÷ »¡ÄÌÕ º¢ò¾÷ «Ãº§Â¡¸¢ì ¸Õçþ÷ «Å÷¸û ¸ñ½§¾Å©Éô ÀüÈ¢ò ¾Õõ ÅÃÄ¡üÚî ¦ºö¾¢¸©Ç ªó¾ ª¾Æ¢ø ¾Õ¸¢ý§þõ.]
இம்மண்ணுலகில் தோன்றிய, மானுடராகப் பெருமளவில் செயல்பட்ட சூரிய குல இராமதேவர் காதையையும்; திங்கள் குலக் கண்ணதேவர் காதையையும் பரப்புவதே நல்லது. இதற்காகவே உகக் கணக்கில் பாரம்பரியமாக இராமகாதை கூறி வரும் கம்பர்களில் சிறந்த தேரெழுந்தூர்க் கம்பனையும், கண்ணன் காதை கூறிவரும் பெருந்தேவனார்களில் சிறந்த மானாமதுரைப் பெருந்தேவனையும் தேர்ந்தெடுத்து இருகாப்பியங்களைப் பதினெண்சித்தர் நெறி விளக்கும் வண்ணம் பாடிடச் செய்தோம்.
மேலும் படிக்க...
ஆவணித் திங்கள் அட்டமித் திதியில், உரோகிணி மீனில் (நட்சத்திரம்) கண்ணன் துவாபரயுகத்தை நிறைவு செய்வதற்காகத் திருக்களாலும், அண்டபேரண்ட அருளாளர்களாலும் பிறந்தான். இவன் பிறந்தது முதல் இறுதி நேரம் வரை தன்னைப் பேராற்றல் மிக்க தேவகுமாரனாக, அருளாளனாக, நவநாத சித்தனாக .. ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் வெளிப் படுத்திட்டான்.
மேலும் படிக்க...
பார் + அதம் = இம்மண்ணில் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு அல்லது இழப்பு (The Greatest destruction or loss on this Earth) = பாரதம் என்று இம்மண்ணுலகில் அனாதிக் காலம், கிரேதாயுகம், திரேதாயுகம் என்று மூன்று பெரும் காலங்களிலும் நிகழாத பேரழிவு, பேரிழப்பு துவாபர யுகத்தில் குருகுலத்தார்களுக்கு இடையில் நிகழ்ந்த போரில் நிகழ்ந்தது. அதாவது, இரு திறத்தாரும் பாண்டவர் - கெளரவர் அழிந்தனர். இதுதான் பாரதப் போரின் குறிப்பிடத்தக்க பேரழிவு, பேரிழப்பு.
மேலும் படிக்க...
துவாபர யுகத்து நவநாத சித்தர்களில் ஒருவனான கண்ணதேவன் முறைப்படி ஆறுகாலம் சிவனைத் தொழுதும், ஒன்பது வகைக் காடுகளிலும் உரிய உச்சிவேளைகளில், உரிய பருவகாலங்களில் சிவசத்திப் பூசைகளைச் செய்தும்; இராமனைப் போலவே
சுடலைச் சாம்பலையே அணிந்து செயல்பட்டதால்தான் ஆயுதம் ஏந்திப் போரிட்ட போர்களிலும், ஆயுதம் ஏந்தாமல் போரிட்ட பாரதப் போரிலும் நிலைத்தற்குரிய பெரிய வெற்றிகளைப் பெற்றிட்டான்.
மேலும் படிக்க...
பாண்டவருக்கும் கெளரவருக்கும் போர் நிகழ்ந்தேயாக வேண்டுமென்ற விதியை யாருடைய மதியாலும் வெல்லவே முடியவில்லை. இதுகாறும் குருகுலத்தார் மறையாக, முறையாக, நெறியாக, வேதமாக, மரபாக, ஒழுகலாறாக, சட்டதிட்டக் கட்டுப்பாடாகத் தங்களுக்கே உரிய சொத்துக்களாகக் காத்து வந்திட்ட அத்திறங்களுக்கும் வேலை வந்துவிட்டது. எனவே, நிகழப் போகிற போர் குருகுல அத்திறப் போராகவே இருக்கும்.
மேலும் படிக்க...
அந்தணர் வேடத்தில் வந்த கண்ணனுக்கு கர்ணன் தன்னுடைய அறச்சத்திகள் அனைத்தையும் நன்கொடையாக வழங்கிய பிறகு; புன்முறுவல் பூத்தபடி “.. கண்ணா! நான் வழங்குபவை புதுவெள்ளம். இது, ஏற்கனவே உள்ள தண்ணீரையும் அடித்துச் சென்றுவிடும்; பிறகு, உடைப்பேற்பட்ட ஏரி ஈரப் பசையே இல்லாமல் வெடித்துச் சிதறிக் கிடப்பது போல்! சாதாரண மனிதனாகச் சிதறுண்டு போகும் நிலைதான் உனக்கு முடிவு ..” என்று முனகிச் சாபமிடுகிறான். இது பலித்தது. எனவே, மனநிறைவும், செயல் வெற்றியும், பிறரை உய்விக்கும் தூய்மைமிகு வாய்மையும், உண்மையான பத்தியும் உடையவர்கள் சாபமிட்டால் கடவுளாகவே தோன்றியவர்களும் பாதிக்கப் படுவர் என்பதையுணர்ந்து பிறரிடம் சாபம் பெறாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க...
கண்ணன் முப்பத்தாறு ஆண்டுகள் பாரதப் போருக்குப் பிறகு வாழ்ந்து; தனது ஏட்டறிவையும், பட்டறிவையும், ஞானத்தையும் .. கதையாக, காதையாக, கவிதையாக [காவியமாக], கீதையாகப் [இசைப் பாடலாக] பதினெட்டு வியாசர்களையும், பல நூறு பைந்தமிழ்ப் புலவர்களையும் துணையாகக் கொண்டு எழுதி முடித்தான். ஆனால், அவன் பைந்தமிழில் எழுதியவைகளும், அவனே தமிழினத்தின் சந்திர குலக் குருவாக வாழ்ந்தான் என்ற பேருண்மையும் .. ஆரியரால் சிதைத்துச் சீரழிக்கப் பட்டு மங்கி மறையச் செய்யப்பட்டு விட்டன.
மேலும் படிக்க...
தமிழர்களுக்குள்ளேதான் பலமொழிகளைப் பேசுபவர்களும்; பல மதங்களைத் தழுவியவர்களும்; பல நாடுகளில் வாழுபவர்களும் மிகுந்திருக்கிறார்கள். அம்மட்டின்றிப் பல நாட்டவர்களும் தமிழ்நாட்டுக்குள் தொடர்ந்து வாழுகின்றார்கள். எனவேதான், தமிழருக்குள் மட்டும் ஒற்றுமை உருவாவதும்; உருவாக்கப் படுவதும் இயலாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
மேலும் படிக்க...
.. எத்தனை யெத்தனை தமிழர்களுக்குத் தங்களுடைய சமயமான பதினெண்சித்தர்களுடைய ‘சித்தர் நெறி’யான ‘சீவநெறி’ எனப்படும் ‘
மெய்யான இந்துமதம்’ வேறு; இன்றைக்கு நாட்டில் உள்ள வேதமதக் கலப்புற்ற சமசுக்கிருத மொழி ‘
ஹிந்துமதம்’ வேறு என்ற தத்துவம் புரிந்திருக்கிறது?!?!?! ..
மேலும் படிக்க...